Tuesday, December 12, 2017

அருகர்களின் பாதை

ஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து துவங்கி சத்தியமங்கலம், சாம்ராஜ் நகர் வழியாக கர்நாடகாவில் நுழைந்து முதல் இடமாக கனககிரியை அடைதல். சாம்ராஜ்நகர் அருகே மலையூர் என்ற சிற்றூரில் உள்ளது இந்தச் சிறிய குன்று. இது கர்நாடகத்தின் மிகப் புராதனமான சமணத் தலங்களில் ஒன்று. கனககிரியைப் பார்த்தபின்பு, மைசூரை அடையாமல் சுற்றிக்கொண்டு கோமத்கிரி சென்று அங்குள்ள கோமத்கிரி பாகுபலிசுவாமி கோயிலைக் காணுதல்.இங்கிருந்து கிளம்பி சிரவணபெலகொலா சென்று விந்தியகிரி அல்லது இந்திரகிரி என்ற மலையின் மேல் அமைந்துள்ள புகழ்பெற்ற கோமதீஸ்வரர் கோவிலை பார்த்தால். அடுத்ததாக சந்திரகிரி சென்று சமண ஆலயங்களைக் பார்த்தல்.

இங்கிருந்து கிளம்பி தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாத ஸ்வாமி கோயிலைப் பார்த்துவிட்டு மூடுபிதிரிக்கு சென்று தங்குதல். காலையில் மூடுபிதிரியில் உள்ள முக்கியமான 18 சமண ஆலயங்களைக் காணுதல்.அவற்றில் குருபஸதி, திரிபுவன திலக சூடாமணி பஸதி, அம்மானவார பஸதி ஆகிய மூன்றும் மிகத் தொன்மையானவை. இவை ஒரே தெருவில் வரிசையாக அமைந்துள்ளன. அடுத்ததாக பெரிய பஸதி என்றும் ஆயிரங்கால் பஸதி என்றும் அழைக்கப்பட்ட கோயிலுக்கு செல்லுதல். பின் ஃபால்குனி என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள வேணூர் சென்று அங்குள்ள பாகுபலிசுவாமியின் சிலையைக் காணுதல்.

மூடுபிதிரியில் இருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் கர்க்களா சென்று அங்குள்ள கோமதீச்வரர் சிலையையும், சதுர்முகபஸதியையும் காணுதல். பின் வரங்கா சென்று சமண மடத்தையும், ஏரியில் அமைந்த அழகிய கோவிலையும் காணுதல். காணுதல்.

பின், ஆகும்பே வழியாக குந்தாதிரி பயணித்து மலையுச்சியில் உள்ள சமண பஸதியைக் காணுதல். குந்தாதிரியில் இருந்து ஹும்பஜ் (ஏ) கும்ச்சா கிளம்பி இங்குள்ள ஹும்பஜ் மடாலயத்தை பார்த்தல்.

அடுத்தாக கதக் அருகே உள்ள ஹங்கல் நோக்கிய பயணம். வழியில் மிகப்பிரம்மாண்டமான லிங்காணமக்கி ஏரியைப் பார்த்தால். பின் ஹங்கலின் முக்கியமான தாரகேஸ்வரர் கோயிலைப் பார்த்தல். ஹங்கலில் இருந்து பனவாசிக்கு வந்து ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முக்தேஸ்வர் ஆலயம் காணுதல். பின், லட்சுமேஸ்வர் சென்று சிக்க மற்றும் தொட்ட பஸதிகளைப் பார்த்துவிட்டு சோமேஸ்வர் ஆலயம் செல்லுதல்.

அங்கிருந்து கிளம்பி முலுகுந்து சென்று அங்குள்ள சித்தேஸ்வரர் கோயிலைப் பார்த்துவிட்டு, அருகே உள்ள இன்னொரு சமணத்தலமான லக்குண்டிக்கு சென்று காசி விஸ்வநாதர் ஆலயம், மல்லிகார்ஜுனர், வீரபத்ரர், மாணிகேஸ்வரர், நன்னேஸ்வரர், லட்சுமிநாராயணன், சோமேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் ஆலயங்களை பார்த்துத்தபின் சமண ஆலயத்தையும் பார்த்தல். அங்கிருந்து டம்பலா சென்று தொட்ட பாஸப்பா கோயில் பார்த்து விட்டு ஹல்ஸி சென்று அங்கிருந்து பெல்காம் செல்லுதல்.

பெல்காம் கோட்டையினுள் அமைந்துள்ள கமல் பஸதி உட்பட இரண்டு சமண ஆலயங்களைக் காணுதல். பின், கோபேஸ்வர் என்றழைக்கப்படும் கித்தாப்பூர் சென்று கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள கோபேஸ்வர் ஆலயத்தைப் பார்த்தல். பின், கும்போஜ் சென்று அங்குள்ள பாகுபலி ஆலயத்தைப் பார்த்தல். அங்கிருந்து கோலாப்பூர் சென்று புகழ்பெற்ற மஹாலட்சுமி கோவிலைக் காணுதல். அங்கிருந்து பூனாவுக்குச் செல்லும் வழியில் நந்திகிரி என்ற சமண மலைக்கு சென்று குகைக்குள் அமைந்துள்ள சமண ஆலயங்களைப் பார்த்துவிட்டு பின் புனே சொல்லும் வழியில் உள்ள கட்ரஜ் ஸ்வேதாம்பர் கோவிலைக் காணுதல். பின், புனே அருகில் உள்ள ஃபெட்ஸா, கார்லே, ஃபாஜா ஆகிய மூன்று குகைவிகாரங்களைக் காணுதல்.

அங்கிருந்து கிளம்பி நாசிக் சொல்லும் வழியில் உள்ள லென்யாத்ரி குகைகள் மற்றும் நானேகட் கணவாயைக் காணுதல். பின், மகாஸ்ருல் உண்ணுமிடத்தில் உள்ள கஜபாத மலைக்கு சென்று அங்குள்ள சமண கோயில்களைக் காணுதல். அடுத்து எல்லோரா செல்லும் வழியில் அமைந்துள்ள தேவகிரி என்று அழைக்கப்பட்ட தௌலதாபாத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தௌலதாபாத் கோட்டையைக் காணுதல்.

எல்லோராவின் புகழ்பெற்ற எல்லோரா குடைவரைக் கோவில்களை பார்த்துவிட்டு அஜந்தா குகைகளுக்கு சென்று சென்று அங்குள்ள அஜந்தா ஓவியங்களைக் காணுதல். பின், அஜந்தாவிலிருந்து கிளம்பி சூரத் சென்று அங்கு அமைந்துள்ள சிந்தாமணி பஸதியைக் காணுதல். பின் தாபோய் சென்று தாபோய் கோட்டையை பார்த்தால்.

அடுத்ததாக, அகமதாபாத் சென்று ஹதீசிங் கோயிலை பார்த்துவிட்டு காந்தி நகரில் அமைந்திருக்கும் அக்ஷர்தாம் கோவிலைக் காணுதல். அங்கிருந்து கிளம்பி ஹரப்பா நாகரிக கால நகரமான லோதலுக்கு சொல்லுதல். லோதலில் அமைந்துள்ள அகழாய்வு நிலங்கள் மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள லோதல் அருங்காட்சியகத்தைக் காணுதல்.

லோதலிலிருந்து பலிதானா சென்று அங்குள்ள சத்ருஞ்சயா மற்றும் மறுபக்கம் இருந்த ஹஸ்தகிரிமலையின் மேல் அமைந்துள்ள சமணக்கோவில்களைக் காணுதல். பின், தலஜா சென்று அங்கு அமைந்துள்ள மிக பழமையான சமண குகைகளைக் காணுதல். அடுத்ததாக கிர்நார் சென்று அங்கு மலை உச்சியில் அமைந்துள்ள நேமிநாதர் ஆலயத்தைக் காணுதல்.

கிர்நாரில் இருந்து கிளம்பி டோலாவீரா செல்லுதல். டோலாவீரா லோதல் போலவே முக்கியமான ஒரு புதைநகரம்.அங்குள்ள புதை நகரையும், அருங்காட்சியகத்தையும் பார்த்துவிட்டு பின் படான் நோக்கி பயணம். படானின் புகழ்பெற்ற ராணி-கி-வாவ் என்ற இடத்தை பார்த்தல். அங்கிருந்து பின், மேஹ்சானா சென்று சிமாந்தா சுவாமி பிரவேஷ்துவார் ஆலயம் மற்றும் அருகேயுள்ள மோதேரா என்ற ஊரில் இருக்கும் சூரியனார் கோவிலைக் காணுதல்.

அடுத்ததாக தரங்கா குன்றுகளில் அமைந்த சமண ஆலயங்களைப் பார்த்துவிட்டு பின் கும்பாரியாவின் ஐந்து பெரிய சமண ஆலயங்களைக் காணுதல். பின், மௌண்ட் அபு அருகில் உள்ள அசல்காட் மற்றும் தில்வாரா சென்று அங்குள்ள சமண ஆலயங்களைக் காணுதல்.

அங்கிருந்து மிர்பூரின் பார்ஸ்வநாதரின் சன்னிதியை பார்த்துவிட்டு உதய்பூர் அருகில் உள்ள சாஸ் பாகு கோவிலைக் காணுதல். ரணக்பூரின் புகழ்பெற்ற சமணக் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின் ராணா கும்பாவால் கட்டப்பெற்ற இந்தியாவின் மாபெரும் கோட்டையான கும்பல்கர் கோட்டையை பார்த்தல். கும்பல்கரில் கிளம்பி ஜெய்சால்மர் வழியாகச்சென்று சாம் என்ற ஊரில் அமைந்துள்ள சாம் மணல் திட்டுகளை காணுதல். அங்கிருந்து பாலைவன அஸ்தமனத்தைக் காணுவது அழகானது. பின் அங்கிருந்து கிளம்பி மீண்டும் ஜெய்சால்மர் சென்று ஜெய்சால்மர் கோட்டையைப் பார்த்துவிட்டு அருகிலுள்ள லொதர்வா சென்று அங்கு மணல் கற்களால் கட்டப்பட்டுள்ள அழகிய பார்ஸ்வநாதர் கோவிலைக் காணுதல். ஜெய்சால்மரில் இருந்து பிகானீர் வழியாக ஜெய்ப்பூர் செல்வது தான் அடுத்த திட்டம். வழியில் பிகானீரில் உள்ள முக்கியமான சமண ஆலயமான பந்தாசர் ஆலயத்தைக் காணுதல். 


ஜெய்ப்பூரின் புறநகரான சங்கானீர் சென்று அங்குள்ள சங்கிஜி திகம்பரர் சமணக் கோவிலைக் காணுதல். பின், ஜந்தர் மந்தர் என்ற புகழ்பெற்ற பழமையான வானாய்வகம் மற்றும் அதன் அருகிலுக்குள்ள ஜல்மஹல் சென்று பார்த்தல். அடுத்ததாக ரண்தம்போர் கோட்டை மற்றும் அருகிலுள்ள புலிகள் சரணாலயத்தைக் காணுதல். அங்கிருந்து கிளம்பி ஜாலர்பதானின் புகழ்பெற்ற பதம்நாத் மந்திர் என்றழைக்கப்படும் சூரியனார் கோவிலைக்காணுதல். ஜாலர்பதானுடன் இந்த பயணம் நிறைவு பெறுகின்றது.

மிக நீண்ட பயணமான இந்த பயணத்தின் குறிப்புகள் 30 கட்டுரைகளாக கிடைக்கின்றன. கட்டுரைகளைப் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை பயன்படுத்தவும்.

அருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா : http://www.jeyamohan.in/23969#.Wi-RuoSH9j5
அருகர்களின் பாதை 2 – சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி : http://www.jeyamohan.in/24008#.Wi-U_ISH9j4
அருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா : http://www.jeyamohan.in/24073#.Wi-Sv4SH9j4
அருகர்களின் பாதை 4 – குந்தாதிரி, ஹும்பஜ் : http://www.jeyamohan.in/24098#.Wi-TCISH9j4
அருகர்களின் பாதை 5 – ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர் : http://www.jeyamohan.in/24126#.Wi-V2ISH9j4
அருகர்களின் பாதை 6 – மூல்குந்த், லக்குண்டி, டம்பால், ஹலசி : http://www.jeyamohan.in/24127#.Wi-TgYSH9j4
அருகர்களின் பாதை 7 – பெல்காம், கித்ராபூர், கும்போஜ் : http://www.jeyamohan.in/24207#.Wi-V1ISH9j4
அருகர்களின் பாதை 8 – கோலாப்பூர், நந்திகிரி, கட்ரஜ் : http://www.jeyamohan.in/24243#.Wi-TQYSH9j4
அருகர்களின் பாதை 9 – கார்லே, ஃபாஜா, ஃபெட்சா : http://www.jeyamohan.in/24254#.Wi-TVISH9j4
அருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட் : http://www.jeyamohan.in/24272#.Wi-TGoSH9j4
அருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா : http://www.jeyamohan.in/24296#.Wi-S94SH9j4
அருகர்களின் பாதை 12 – எல்லோரா : http://www.jeyamohan.in/24331#.Wi-S_YSH9j4
அருகர்களின் பாதை 13 – அஜந்தா : http://www.jeyamohan.in/24396#.Wi-VqISH9j4
அருகர்களின் பாதை 14 – சூரத், தாபோய் : http://www.jeyamohan.in/24436#.Wi-VD4SH9j4
அருகர்களின் பாதை 15 – அகமதாபாத்,லோதல் : http://www.jeyamohan.in/24479#.Wi-TPYSH9j4
அருகர்களின் பாதை 16 – பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா : http://www.jeyamohan.in/24513#.Wi-Vt4SH9j4
அருகர்களின் பாதை 17 – கிர்நார் : http://www.jeyamohan.in/24543#.Wi-S54SH9j4
அருகர்களின் பாதை 18 – டோலாவீரா : http://www.jeyamohan.in/24580#.Wi-Sw4SH9j4
அருகர்களின் பாதை 19 – படான், மேஹ்சானா, மோதேரா : http://www.jeyamohan.in/24633#.Wi-VYoSH9j4
அருகர்களின் பாதை 20 – தரங்கா, கும்பாரியா : http://www.jeyamohan.in/24655#.Wi-VAISH9j4
அருகர்களின் பாதை 21 – அசல்கர், தில்வாரா : http://www.jeyamohan.in/24672#.Wi-UO4SH9j4
அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா : http://www.jeyamohan.in/24721#.Wi-UQISH9j4
அருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர் : http://www.jeyamohan.in/24753#.Wi-TjYSH9j4
அருகர்களின் பாதை 24 – ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு : http://www.jeyamohan.in/24778#.Wi-UMISH9j4
அருகர்களின் பாதை 25 – லொதுர்வா, ஜெய்சால்மர் : http://www.jeyamohan.in/24811#.Wi-UNYSH9j4
அருகர்களின் பாதை 26 – பிக்கானீர் : http://www.jeyamohan.in/24838#.Wi-UCYSH9j4
அருகர்களின் பாதை 27 – சங்கானீர், ஜெய்ப்பூர் : http://www.jeyamohan.in/24862#.Wi-TN4SH9j4
அருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர் : http://www.jeyamohan.in/24890#.Wi-VS4SH9j4
அருகர்களின் பாதை 29 – ஜாலார்பதான் : http://www.jeyamohan.in/24947#.Wi-TFoSH9j4
அருகர்களின் பாதை 30 – நீண்ட பயணம் : http://www.jeyamohan.in/24977#.Wi-UooSH9j4


ஈரோடு முதல் ஹல்சி வரையிலான பயண பாதையைக் காண இங்கே சொடுக்கவும்.

பெல்காம் முதல் எல்லோரா வரையிலான பயண பாதையைக் காண இங்கே சொடுக்கவும்.

அஜந்தா முதல் கிர்நார் வரையிலான பயண பாதையைக் காண இங்கே சொடுக்கவும்.

ஜுனாகத் முதல் மிர்பூர் வரையிலான பயண பாதையை காண இங்கே சொடுக்கவும்.


மிர்பூர் முதல் ஜாலர்பதான் வரையிலான பயண பாதையை காண இங்கே சொடுக்கவும்.

தோராயமான பயண வரைபடம்:


2 comments:

அருகர்களின் பாதை

ஈரோட்டில் ஆரம்பித்து கர்நாடக வழியாக இந்தியாவின் பெரும் சமண தலங்களை காணும் பொருட்டு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து துவங...